ஆட்சிக்கு வரும் ராகுல்காந்தி கனவு நிறைவேறாது- ஸ்மிரிதி இரானி விமர்சனம்..!

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “விஐபி விவசாயி” என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த வேளாண் மசோதாக்கள் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி கூறினார்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் 3 நாள் டிராக்டர் பேரணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில்,
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரண்டாவது நாளாக நேற்று பஞ்சாபில் அவர் டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டார்.

இந்த பேரணையில் ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து,  குஜராத் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆட்சிக்கு வரும் ராகுல்காந்தியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தி உள்ளார். அவரை போன்ற வி.ஐ.பி. விவசாயிகளால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning