சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி ட்வீட்…!

Default Image

சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி ட்வீட்.

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டான் சுவாமிக்கு  உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், இவருக்கு மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி என்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த  நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், தந்தை ஸ்டான் சுவாமி மறைவிற்கு மனமார்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவர் நீதி மற்றும் மனிதாபிமானத்திற்கு தகுதியானவர் என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்