அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி 3வது நாளாக ஆஜர்!

Default Image

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 3வது நாளாக விசாரணை.

டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக மருத்துவமனையில் இருப்பதால், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக ஆஜராகியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 2 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளது. இதற்கிடையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து, 3வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்