‘கட்டமைப்பை வலுப்படுத்துவோம்’ ! முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் ராகுல் காந்தி!

Rahul Gandhi

ராகுல் காந்தி: இந்திய கூட்டணி கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களின் கூட்டம்  கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகப்பட்டார்.

இதனால், இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு  வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி. தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். மேலும், நமது அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள கூட்டாச்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்” என பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்