இந்திய எல்லை சீனாவால் ஆக்கிரமிக்கபடவில்லை. செயற்கைக்கோள் படம் உண்மையானது என பிரதமர் கூறினால் அது சீனாவிற்கு பயன் தரும் வகையில் அமைந்துவிடும் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய-சீன எல்லையான லடாக் விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து இந்திய பிரதமர் மோடி கூறுகையில், ‘எந்த ஒரு இந்திய எல்லை பகுதியும் சீனாவினால் ஆக்கிரமிக்க படவில்லை.’ என மறுப்பு தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ பிரதமர் மோடி இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து உண்மையான தகவல்களை நாட்டு மக்களுக்கு சொல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ‘ என தெரிவித்தார்.
மேலும், ‘ எந்த ஒரு இந்திய எல்லையும் சீனாவால் ஆக்கிரமிக்கபடவில்லை என்றால், செயற்கைக்கோளில் வெளியாகியுள்ள படங்கள் சீனாவிற்கு பயன்தரும் வகையில் உள்ளது.’ என அவர் குறிப்பிட்டார்
மேலும், ‘ இந்திய எல்லைகளை பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு. லடாக்கின் தற்போதைய நிலமை குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயலாற்ற வேண்டும்.’ எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்திய எல்லை சீனாவால் ஆக்கிரமிக்கவில்லை என கூறினால் செயற்கைக்கோள் படம் உண்மையானது என நீங்கள் (பிரதமர் மோடி) கூறினால் அது சீனாவிற்கு பயன் தரும் வகையில் அமைந்துவிடும். எனவும், ராகுல் காந்தி தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…