Categories: இந்தியா

டெம்போவில் பணமா.? பிரதமரின் விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பதில்.!

Published by
கெளதம்

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 3 கட்ட தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதியன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் மற்றும் தெலுங்கானாவில் மக்களவை தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (புதன் கிழமை) தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ராகுல் காந்தி பற்றியும் காங்கிரஸ் கட்சி பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ராகுல் காந்தி, அதானி, அம்பானி ஆகியோரிடம் பணம் பெற்று உள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, முன்பு ரபேல் விவகாரம் பற்றி பேசிய ராகுல் காந்தி அது மங்கிப்போனதும், உடனடியாக அதானி, அம்பானியை குறிவைத்து பேச தொடங்கினார். கடந்த 5 ஆண்டுகளாக அதானி, அம்பானி பற்றி பேசி வந்த பிரதமர் மோடி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவர்களை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்.

ஏனென்றால் அதானியிடம் இருந்தும், அம்பானியிடம் இருந்தும் டெம்போ வேன் மூலமாக பணம் பெறுகிறது காங்கிரஸ். ஐந்து வருடங்களாக அவர்களை விமர்சித்து வந்த காங்கிரஸ் தற்போது ஒரே இரவில் அதனை நிறுத்திவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று வீடியோ மூலம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி அவர்களே வணக்கம். நீங்கள் இப்போது பதட்டத்தில் இருக்கிறீர்களா.? வழக்கமாக பூட்டிய அறையில் தானே தான் அதானி, அம்பானி பெயரை சொல்வீர்கள்.? ஆனால் இப்போது பொதுவெளியில் அவர்கள் பெயரை கூற தொடங்கியுள்ளீர்கள்.

டெம்போ வேனில் காசு வருவதாக பேசி இருக்கிறீர்கள்.? அது உங்கள் சொந்த அனுபவமா.? முடிந்தால் அமலாக்கத்துறை (ED), CBIகளை ஏவி விசாரிக்க சொல்லுங்கள். உடனடியாக விசாரிக்க சொல்லுங்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் மீண்டும் உறுதியாக கூறுகிறேன். அதானி, அம்பானிக்கு மோடி எவ்வளவு பணம் கொடுத்து உள்ளாரோ அதே அளவில் மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மக்களை செல்வந்தர்கள் ஆக்குவேன். பாஜக வெறும் 22 பேரைதான் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது .

ஆனால், காங்கிரஸ் கோடான கோடி மக்களை லட்சாதிபதிகளாக உருவாக்க போகிறேன் என ராகுல் காந்தி அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

Published by
கெளதம்

Recent Posts

GT vs MI : கேப்டன் பாண்டியா என்ட்ரி! இன்னைக்கு என்னெல்லாம் செய்யப் போறாரோ.?

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…

45 minutes ago

தவெக vs திமுக : “விஜய் தொண்டர்களுக்காக தான் அப்படி பேசியிருப்பார்!” இபிஎஸ் பேட்டி!

சேலம் : நேற்று  தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…

1 hour ago

செங்கோட்டையனின் ‘திடீர்’ டெல்லி பயணம்.! இபிஎஸ் ரியாக்சன் என்ன?

சென்னை :  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

2 hours ago

Live : மியான்மர் நிலநடுக்க பாதிப்புகள் முதல்… உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…

4 hours ago

எந்த பயனும் இல்ல., ரிட்டயர்டு ஆகிடுங்க.., CSK-வில் தோனி மவுசு குறைகிறதா?

சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…

4 hours ago

மியான்மர் நிலநடுக்கம் : 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா!

நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…

5 hours ago