மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் இதையடுத்து நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட்டையும் பாஜக ஒதுக்கியுள்ளது. இதனிடையே 18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, ராகுல் காந்திக்கு நல்ல நண்பராக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சிந்தியாவின் இந்த திடீர் முடிவு ராகுலை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் யார் முதல்வர்? என்று கமல்நாத் மற்றும் சிந்தியா இடையே போட்டி நடந்தபோது, இருவரையும் அழைத்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருவருடன் இருக்கும் புகைப்படத்தை ராகுல் பதிவிட்டிருந்தார். தற்போது, சிந்தியா பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி 2018ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்துள்ளார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…