இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை துவங்கி இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலை வீரர்களை ஒருங்கிணைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு அரசியல் பிரபலங்கள் மரியாதை செலுத்தியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் இருக்கும் ராகுல் காந்தி தற்போது அசாம் மாநிலத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் , ராகுல் காந்தி , நேதாஜியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அந்த புகைப்படத்தை எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளில் அவருக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் காந்தி, நேரு, ஆசாத், சுபாஸ் மற்றும் ஜான்சி படைப்பிரிவின் ராணி என்ற படைப்பிரிவுகளுடன் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தது.
பன்மைத்துவம், சமூக மற்றும் பொருளாதார நீதி, சகிப்புத்தன்மை மற்றும் பாலின உள்ளடக்கம் ஆகியவற்றின் இந்திய மதிப்புகளுக்கு அவர் ஒரு முன்னணி எடுத்துக்காட்டு. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார். மேலும், பன்மைத்துவம், சமூக மற்றும் பொருளாதார நீதியின் இந்தியாவின் மதிப்புக்கு நேதாஜி ஒரு முக்கிய காரணம் என்றும் கூறினார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு , தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் அன்று அவருக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி போராட வேண்டும்.அவரது சக்திவாய்ந்த ஆளுமை நமது சுதந்திர போராட்டத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். தேசம் எப்போதும் நேதாஜியை மிகுந்த நன்றியுடன் நினைவுகூரும் என பதிவிட்டு இருந்தார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…