புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று டெல்லி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் கூறுகையில் “ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை ஊக்குவிக்க முடியும். விவசாயிகள் பிரச்சனை முதல் ஜிஎஸ்டி பாதிப்புகளை அவர் கையாண்ட விதம் அவரின் தலைமைத்துவ திறனைக் காட்டுகிறது” என்று கூறினார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை தடுக்க தவறியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் பொறுபேற்று பதவிலக வேண்டும் என்று மற்றறொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று பெரிய பின்னடைவை சந்தித்தது ,இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.அதன் பின்பு சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…