Categories: இந்தியா

நான் பேசியதை சேர்த்தே ஆக வேண்டும்… ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: நேற்று மக்களவையில் நான் பேசியதில் நீக்கிய பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,  உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும், அக்னிவீர் திட்டம் வீரர்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது போல உள்ளது. இந்த திட்டத்தால் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம், இழப்பீடு கிடைக்கப்பெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மக்களவையில் ராகுல் காந்தி பேசியது ஆதாரமற்ற குற்றசாட்டு என பாஜக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனை அடுத்து,  ராகுல் காந்தி பேசிய குறிப்பிட்ட கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது உறுப்பினர்களின் கடமை. அதன்படி தான் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். என்னுடைய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியது மக்களவை ஜனநாயகத்திற்கு எதிரானது. நீக்கப்பட்ட எனது பேச்சை அவை குறிப்பில் சேர்க்க வேண்டும். மக்களவை சட்டவிதி 105இன் கீழ் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச்சுரிமை உள்ளது என சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

15 minutes ago

ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

22 minutes ago

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…

39 minutes ago

“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன?

சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…

2 hours ago

“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!

விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…

2 hours ago

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…

3 hours ago