Categories: இந்தியா

நான் பேசியதை சேர்த்தே ஆக வேண்டும்… ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: நேற்று மக்களவையில் நான் பேசியதில் நீக்கிய பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,  உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும், அக்னிவீர் திட்டம் வீரர்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது போல உள்ளது. இந்த திட்டத்தால் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம், இழப்பீடு கிடைக்கப்பெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மக்களவையில் ராகுல் காந்தி பேசியது ஆதாரமற்ற குற்றசாட்டு என பாஜக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனை அடுத்து,  ராகுல் காந்தி பேசிய குறிப்பிட்ட கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது உறுப்பினர்களின் கடமை. அதன்படி தான் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். என்னுடைய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியது மக்களவை ஜனநாயகத்திற்கு எதிரானது. நீக்கப்பட்ட எனது பேச்சை அவை குறிப்பில் சேர்க்க வேண்டும். மக்களவை சட்டவிதி 105இன் கீழ் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச்சுரிமை உள்ளது என சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

55 minutes ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

2 hours ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

3 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

4 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

16 hours ago