Categories: இந்தியா

ஆம்ஸ்ட்ராங் படுகொலை., குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.! ராகுல் காந்தி இரங்கல்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

நேற்று, சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் , திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து இரங்கலை தெரிவித்து இருந்தனர்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தனது இரங்கல் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன் என தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

22 minutes ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

59 minutes ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

1 hour ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

2 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

3 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

5 hours ago