PM Modi - Rahul Gandhi [File Image]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டும் விவசாய கட்சிக்கு விட்டுக்கொடுத்து 199 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக 200 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக போராடி வருகிறது. இன்று , ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் சாதுல்ஷாஹர் நகரில் பிரச்சரத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி , ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் அரசு செய்த சாதனைகள் குறித்தும், பாஜக , பிரதமர் மோடி பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
வளர்ந்த இந்தியாவில் 4 முக்கிய தூண்கள்… பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இலக்கு – பிரதமர் மோடி பேச்சு
அவர் கூறுகையில், ” பிரதமர் மோடி அனைத்து மக்கள் வங்கி கணக்குகளிலும், 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை. அதை இனிமேலும் அவர் தரமாட்டார். அனால், கோடீஸ்வரர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்வார். இதுவரை ரூ. 14.5 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதில் 50 சதவீதத்தினர் ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தியது. காங்கிரஸ் அரசு என்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசு என ஆளும் காங்கிரஸ் மாநில அரசு பற்றி கூறினார்.
அடுத்து, பிரதமர் மோடி பொதுமக்களுக்கான காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அதற்கான பணத்தை மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி மூலம் வசூலித்து விடுகிறார். ஆனால், புயல் வந்தால், கனமழை பெய்தால், விவசாயிகள் நஷ்டம் அடைந்தால், காப்பீட்டு நிறுவனம், இதுவரை ஒரு ரூபாய் கூட தந்ததில்லை. இதுதான் நரேந்திர மோடியின் திட்டம் எண்வும், ஹிந்தி படியுங்கள், ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் பேசுவார்கள். ஆனால், பாஜக தலைவர்களைக் கேட்டால், அவர்கள் குழந்தைகள் ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்து வருவதாக என்று சொல்வார்கள் என பாஜகவினர் பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்தார்.
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…