முதியோர் இல்லத்தில் அமர்ந்து மதிய உணவு அருந்திய ராகுல் காந்தி..!

Default Image

கேரள மாநிலம் வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி இன்று முதியோர் இல்லத்தில் அமர்ந்து மதிய உணவருந்தினார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தன் நாடாளுமன்ற தொகுதி வயநாட்டிற்கு வந்துள்ளார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். அதன் பின்பதாக தொகுதியின் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், இன்று மலப்புரத்தில் உள்ள காந்தி பவன் முதியோர் இல்லத்தில் ராகுல் காந்தி அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார்.

இவர் நேற்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார். இதனை அடுத்து மானந்தவாடியில் சட்ட படிப்பிற்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் அமர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மதிய உணவை அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்