Categories: இந்தியா

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Published by
கெளதம்

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது. அதன்படி, கேரளா வயநாட்டில் போட்டியிட்டு அங்கு தேர்தலும் முடிந்துவிட்டது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் மக்களவை தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மே 20 ஆம் தேதி) கடைசி நாளாகும்.

இந்நிலையில், 2004ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் சோனியா காந்தி வெற்றி பெற்று இருந்த உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்த முறை யார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை ரேபரேலி தொகுதியில் தனது தாய் சோனியா காந்திக்கு பதில் மகன் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது, கட்சித் தலைவருடன் அவரது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் ரேபரேலி தொகுதி எம்பியான சோனியா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் , காங்கிரஸ் தொண்டர்களோடு I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சியினரும் கலந்துகொண்டனர்.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

40 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

46 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago