rahulgandhi [Imagesource : Hindustantimes]
கடந்த 9-ஆம் தேதி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், தெலுங்கானாவில், காங்., எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, ராகுல்காந்தி, ஜக்தியால் என்ற இடத்தில் பேரணியாக சென்று அங்கு உரையாற்றினார்.
தெலுங்கானாவில் ஆட்சி அமைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.! ராகுல்காந்தி உறுதி.!
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் விளையும் ஒவ்வொரு பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, ரூ.500 கூடுதலாக கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா உட்பட இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்றும், தெலுங்கானாவில் முதல்வர் கே.சி.ஆர் குடும்பம் எவ்வளவு கொள்ளையடித்திருக்கிறது என்பது சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தெரிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, தெலங்கானா கரீம்நகரில் சாலையோர கடையில் ராகுல் காந்தி தோசை சுட்டு பிரசாரம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…