Categories: இந்தியா

சுதந்திர தின விழாவில் கடைசி இருக்கையில் ராகுல் காந்தி! சர்ச்சையான விவகாரம்…

Published by
கெளதம்

டெல்லி : செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 10 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெற்றுள்ளார்.

78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக இந்திய தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பில் உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்குவதே மரபு. ஆனால், ராகுலுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி கடைசி வரிசைக்கு முன் இருக்கையில், பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களான மனு பாக்கர், பிஆர் ஸ்ரீஜேஷ் ஆகியோருடன் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார்.

முன் வரிசையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் அமர்ந்திருந்த நிலையில், கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்தில் உள்ள ராகுல் காந்திக்கு கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டது விவாதத்தை எழுப்பியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெரும் அளவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடங்களை பெறாததாலும் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருந்தது. ஆனால், இப்பொது 99 தொகுதியுடன் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை காங்கிரஸ் கட்சி இந்த முறை பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்  இருக்கையில் ராகுல் காந்தி அமைந்திருந்தார். அப்படி இருக்கையில், சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதை ஏன் கொடுக்கவில்லை என்றும், அவருக்கான இருக்கையும் சரியாக ஒதுக்கப்படாதது குறித்தும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்கும் பொழுது, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது, ​​சோனியா காந்திக்கு சுதந்திர தின விழாவில், முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

59 minutes ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

1 hour ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

2 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

3 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

3 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

3 hours ago