#BREAKING: ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல் காந்தி கைது..?

Default Image

உத்தரபிரதேசத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி  மற்றும் அவரது சகோதரர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த  அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 144 தடை உத்தரவை மீறி  ராகுல்காந்தி சென்றதால் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ன நடந்தாலும் ஹத்ரசுக்கு சென்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்காமல் பின்வாங்க போவதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 4 பேர் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, பல இடங்களில் எலும்பு முறித்து, நாக்கை வெட்டி உள்ளனர்.

பலத்த காயங்களுடன் அந்த அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,  உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்