ப.சிதம்பரத்தை இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்திக்கின்றனர்..?!

Default Image

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.பிறகு சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை திகார் சிறையிலேயே சிதம்பரத்தை கைது செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ப. சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார்.
நேற்று  சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த விசாரணையை நாளை விசாரிப்பதாக நிதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் சிதம்பத்தை காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி மற்றும்  பிரியங்காகாந்தி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்