திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை சந்தித்த ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி

Default Image

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை  ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதேவேளையில் அமலாக்கத்துறையும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தது.இதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் விசாரிக்க  டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனால் அவரை கைது செய்து அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் இன்று  திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் அவரது  சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.   சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்