கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்று காணொலிக்காட்சி மூலம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்தில் வைத்திருப்பது எளிது என்றும், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது எனவும் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொரோனாவால் அமலில் இருக்கும் பொதுமுடக்கத்தை தளர்த்துவதில் அரசு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றும் நீண்ட நாட்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், ஊரடங்கால் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நாம் படிப்படியாக தளர்த்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது யாராவது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருவதால், மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வு செய்யப்படுமா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதியில் தளர்வு செய்யப்படும் என்றும் மறுபக்கம் நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ மே 3 க்கு பிறகு மத்திய அரசு ஊரடங்கை குறித்து ஓர் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…