பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை – ரகுராம் ராஜன்

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று காணொலிக்காட்சி மூலம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்தில் வைத்திருப்பது எளிது என்றும், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது எனவும் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொரோனாவால் அமலில் இருக்கும் பொதுமுடக்கத்தை தளர்த்துவதில் அரசு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றும் நீண்ட நாட்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், ஊரடங்கால் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நாம் படிப்படியாக தளர்த்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது யாராவது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருவதால், மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வு செய்யப்படுமா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதியில் தளர்வு செய்யப்படும் என்றும் மறுபக்கம் நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ மே 3 க்கு பிறகு மத்திய அரசு ஊரடங்கை குறித்து ஓர் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

43 minutes ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

1 hour ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

2 hours ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

2 hours ago

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…

3 hours ago

முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…

3 hours ago