பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது.
ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் இன்று பிற்பகல் வரவுள்ளது. இதன்காரணமாக, விமானப்படை தளத்தை சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானம் தரையிறங்கும்போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுக்கவும், அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்சில் இருந்து 7,000 கி.மீ தூரம் பயணித்து, இன்று மதியம் 2 மணிக்கு ஹரியானாவில் உள்ள விமானப்படை தளத்தில் ரஃபேல் போர் விமானங்கள் வரவுள்ள நிலையில், தற்பொழுது அந்த 5 விமானங்களும் இந்திய வான் எல்லையில் நுழைந்தது. மேலும் அந்த விமானங்களுக்கு ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பளிக்கப்பட்டது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…