அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக வருகிறார். அப்போது வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணிக்கிறார். பின்னர் அங்கு அவருக்கு, “நமஸ்தே டிரம்ப்” என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். இதனிடையே டிரம்ப் வருகையையொட்டி சர்தார் வல்லாபாய் ஸ்டேடியம் அருகே உள்ள மோடேரா (Motera) பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இந்நிலையில், 22 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் அவர்களை அங்கிருந்து விரைவில் வெளியேற சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதால், வெளியூருக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளின் தரப்பில் கூறுைகயில், இந்த குடிசைவாசிகள் நகர திட்டமிடல் திட்டங்களில் ஒன்றின் கீழ் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நோட்டீஸ் அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்றனர். இதற்கு முன் டிரம்ப் வருகையொட்டி அப்பகுதியில் குடிசைகளை மறைத்து சுவர்கள் எழுப்பப்பட்டு அழகுபடுத்தப்பட்டது என குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…
சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…