பொதுத்தேர்வு வினாத்தாளில் குஜராத்தில் நடந்த கலவரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு சிபிஎஸ்இ கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் -டிசம்பர் மாதத்திலும், 2-ஆம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 1 முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற CBSE 12-ம் வகுப்பு Sociology வினாத்தாளில் 2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் எந்த அரசாங்கத்தின் கீழ் நடந்தது.? என்ற கேள்வியில் காங்கிரஸ், ஜனநாயகம், பிஜேபி மற்றும் குடியரசு ஆகியவை மாணவர்களுக்கு பதில் அளிக்க கொடுக்கப்பட்டு இருந்தது.
இதற்கு சிபிஎஸ்இ கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த கேள்வி பொருத்தமற்றது எனவும் வினாத்தாள்களை அமைப்பதற்கான சிபிஎஸ்இ வழிகாட்டுதல்களை மீறுவதாகும். பொதுத்தேர்வு வினாக்களில் கேள்விகள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்.
மதம் & வகுப்பு சார்ந்த நடுநிலைத்தன்மையுடனும் இருத்தல் அவசியம் என்று CBSE தெரிவித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…