உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த அதிபர் புதினுடன் பேசுமாறு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கோரிக்கை.
போரை நிறுத்த இந்திய பிரதமர் தலையிடுவதற்காக காத்திருப்பதாக உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை விடுத்துள்ளார். அதில், ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சை கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும் பேச முடியும், உக்ரைன் அதிபருடனும் பேச முடியும்.
வரலாற்றில் பலமுறை அமைதியை ஏற்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும் உக்ரைன் தூதர் தெரிவித்தார். பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புகிறேன். உக்ரைனுக்கு ஆதரவு அளிக்குமாறு இந்தியாவை கேட்டுக்கொள்வதாகவும் உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கூறினார்.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் உயிரிழந்தனர். இராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷியா உடனான தூதரக உறவுகளை உக்ரைன் முறித்துக்கொண்டது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…