பிரதமர் மோடி மான் கி பாத் என்பதற்கு பதிலாக பெட்ரோல் கி பாத் அல்லது டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அமைச்சரவையிலிருந்து பாபுல் சுப்ரியோ அவர்கள் நீக்கப்பட்டுள்ள நிகழ்வு மூலம் வருகிற 2024 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்து கொண்டது என்பதை உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும் பிரதமருக்கு நான் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். இருப்பினும் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தினமும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது. ஆனால், பிரதமர் மான் கி பாத் (மனதின் குரல் ) நடத்துவதில் மட்டுமே மும்முரமாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக அவர் பெட்ரோல் கி பாத், டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சரவை குறித்து நான் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…