மனதின் குரல் என்பதற்கு பதில் பெட்ரோலின் குரல் என வையுங்கள் – மம்தா பானர்ஜி!

Default Image

பிரதமர் மோடி மான் கி பாத் என்பதற்கு பதிலாக பெட்ரோல் கி பாத் அல்லது டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.

நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அமைச்சரவையிலிருந்து பாபுல் சுப்ரியோ அவர்கள் நீக்கப்பட்டுள்ள நிகழ்வு மூலம் வருகிற 2024 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்து கொண்டது என்பதை உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும் பிரதமருக்கு நான் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். இருப்பினும் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

நாடு முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், தினமும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது. ஆனால், பிரதமர் மான் கி பாத் (மனதின் குரல் ) நடத்துவதில் மட்டுமே மும்முரமாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக அவர் பெட்ரோல் கி பாத், டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சரவை குறித்து நான் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்