நீட் தேர்வை கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில், இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சிலர் மீது தேச துரோக வழக்கு போட்டிருப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .இது சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய அரசு கொண்டிருப்பதை காட்டுகிறது. அதுமட்டுமின்றி மரியாதைக்குரிய பாரத பிரதமர் மோடியும் சென்று கொண்டிருக்கிறார்.
இது இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்கள் ,அறிஞர்கள், எழுத்தாளர்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நீட் தேர்வை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளை இதற்கு கீழ் கொண்டுவருவது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீன நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் சென்னை வருவது தமிழகத்துக்கு மட்டுமல்ல இதனால் தென்னிந்தியாவை பெருமைப்படும்.
ஆனால் அவர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் வைப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .புதுச்சேரியை பொருத்தவரை டிஜிட்டல் பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…