நீரவ் மோடிக்கு விதிமுறைகளை மீறி கடன் பெற உத்தரவாதக் கடிதம் வழங்குவதற்காக தங்கம், வைரம் மற்றும் பல பொருட்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் லஞ்சமாக பெற்றதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு 12,700 கோடி ரூபாய் கடன் அளித்தது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உட்பட 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்நிலையில் விதிகளை மீறி நீரவ் மோடிக்கு கடன் உத்தரவாத கடிதம் அளிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை அதிகாரி யஷ்வந்த் ஜோஷி, 60 கிராம் எடைகொண்ட இரண்டு தங்கக் காசுகளையும், வைர காதணி ஒன்றையும் பல பொருட்களையும் லஞ்சமாக பெற்றுள்ளதாக சிபிஐ போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
லஞ்சமாகப் பெறப்பட்ட தங்க, வைர நகைகளை வங்கி அதிகாரியின் வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…