பணமோசடி வழக்கில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் மருமகனை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹானி என்பவருடன் வியாபாரத் தொடர்புடைய குத்ராதீப் சிங் என்பவரிடம் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.8 கோடியும், பூபிந்தரின் நண்பரான சந்தீப்பிடம் இருந்து ரூ.2 கோடியும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும், ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சும் கைப்பற்றப்பட்டது.
சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த பூபிந்தர் சிங் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி நேற்று விசாரணை நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் நீடித்த விசாரணையில், பூபிந்தர் சிங் தனது உடல்நிலை சரியில்லை என அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பூபிந்தர் சிங் ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிற்பகல் 1 மணியளவில், பூபிந்தரின் உடல்நிலை இயல்பாக உள்ளதாக மருத்துவமனை கூறியது. இதையடுத்து மாலை பூபிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…