புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் முதல்வர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். இந்த தகவல் பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மான் பிரதமரை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக மான் முன்னதாக ட்வீட் செய்திருந்தார். தேசிய பாதுகாப்பிற்காக பஞ்சாப் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தபோது ”பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாபின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து பாடுபடுவோம்” என்று கூறியிருந்தார். இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…