சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள புனே போக்குவரத்துக்கு காவல்துறை.
இளைஞர்கள் மற்றும் சில சாலை விதிகளை மதிக்காதவர்களுக்காக போக்குவரத்துக்கு காவல்துறையினர் தங்களது நேரத்தை செலவழித்து பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மதிக்காமல் பலர் தங்களது போக்கில் செல்வதும் உண்டு, இதனால் ஆபத்தை சந்திப்பதும் அவர்கள் தான். புனேயில் உள்ள சாலை பாதுகாப்பு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த செய்தி ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் புகைப்படமாக பதிவு செய்துள்ளனர். அதில் மூன்று வேகமானி புகைப்படங்களை பதிவிட்டு அதற்கு அர்த்தங்களை எழுதி உள்ளனர். அதாவது சாதாரணமாக 50 வேகத்தில் செல்லக் கூடியவர்கள் மெதுவான வேகத்தில் வாகனம் ஓட்டுவதை காட்டுகிறது என்பதை குறிக்க நம்பிக்கை எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது உள்ளவர்கள் மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவது எதார்த்தமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களை முட்டாள் எனும் சொல்லால் குறிப்பிட்டு அந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவுடன் அவசரம் இழப்பில் தான் முடியும், வேகமணியை வெல்ல வேண்டும் என்ற அவசரம் வேண்டாம் என புனே காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர். இதோ அந்த பதிவு,
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…