புல்வாமா தாக்குதல்:தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Default Image

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குல்: 

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

Image result for புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

 

அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.பல மணிநேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டையில்  2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்