கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை கொண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார் இந்த தாக்குதலை நடத்தினார்.
இந்த கோர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த வைசுல் இஸ்லாம் , புல்வாமாவை சேர்ந்த முஹம்மத் அப்பாஸ் ராதர் என்ற 2 தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வைசுல் இஸ்லாம் இந்த தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இவற்றை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கட்டளையின் பேரில் வாங்கியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக என்ஐஏ அதிகாரி ஒருவர்கூறியுள்ளார்.
ஆன்லைன் மூலம் வாங்கிய பொருட்களை வைசுல் இஸ்லாம் நேரடியாக தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளார். இதேபோல கைதான முஹம்மத் அப்பாஸ் ராதர் தாக்குதலை நடத்திய அடில் அகமது தார் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்ட தாரிக் அஹம்மத் ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜன் அவர்கள் வீட்டிற்கு தீவிரவாதிகளை பத்திரமாக அனுப்பிவைத்ததும் முஹம்மத் அப்பாஸ் ராதர் என்பது விசாரணையில் தெரிந்ததாக என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறிள்ளார்.
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…
பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…