புல்வாமா தாக்குதலுக்கு… ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிக்க பொருள் வாங்கிய… இளைஞன் உட்பட 2 பேர் கைது..!

Published by
murugan

கடந்த ஆண்டு  பிப்ரவரி 14-ம் தேதி  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை கொண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையை சேர்ந்த அடில் அகமது தார்  இந்த தாக்குதலை  நடத்தினார்.

இந்த கோர தாக்குதலில்  40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த வைசுல் இஸ்லாம்  , புல்வாமாவை சேர்ந்த முஹம்மத் அப்பாஸ் ராதர் என்ற 2 தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 வைசுல் இஸ்லாம் இந்த  தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இவற்றை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கட்டளையின் பேரில்  வாங்கியதாக விசாரணையில்  ஒப்புக்கொண்டதாக என்ஐஏ அதிகாரி ஒருவர்கூறியுள்ளார்.

ஆன்லைன் மூலம் வாங்கிய பொருட்களை  வைசுல் இஸ்லாம் நேரடியாக தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளார். இதேபோல கைதான  முஹம்மத் அப்பாஸ் ராதர் தாக்குதலை நடத்திய அடில் அகமது தார் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்ட தாரிக் அஹம்மத் ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜன் அவர்கள் வீட்டிற்கு தீவிரவாதிகளை பத்திரமாக அனுப்பிவைத்ததும் முஹம்மத் அப்பாஸ் ராதர் என்பது விசாரணையில் தெரிந்ததாக என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறிள்ளார்.

Published by
murugan

Recent Posts

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

57 minutes ago

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

2 hours ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

2 hours ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

9 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

10 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago