இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி மே 24-ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து மதுபானங்கள் வாங்க யாரும் புதுச்சேரிக்குள் வராமல் இருக்க மதுபானங்களுக்கு சிறப்பு கலால் வரியில் 25% கூடுதல் வரியை விதித்து, அதை மார்ச் 31, 2021 வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று முதல் மதுபானங்கள் மீதான சிறப்பு கலால் வரியை வசூலிக்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சிறப்பு கலால் வரியின் செல்லுபடியை அகற்ற கலால் துறை சமர்ப்பித்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளேன். இதனால் மதுபானங்கள் மீதான சிறப்பு கலால் வரி விதிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த குறைந்தபட்ச விலை மறுபடியும் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பை அறிந்த மதுபிரியர்கள், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…