இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி மே 24-ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து மதுபானங்கள் வாங்க யாரும் புதுச்சேரிக்குள் வராமல் இருக்க மதுபானங்களுக்கு சிறப்பு கலால் வரியில் 25% கூடுதல் வரியை விதித்து, அதை மார்ச் 31, 2021 வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று முதல் மதுபானங்கள் மீதான சிறப்பு கலால் வரியை வசூலிக்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சிறப்பு கலால் வரியின் செல்லுபடியை அகற்ற கலால் துறை சமர்ப்பித்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளேன். இதனால் மதுபானங்கள் மீதான சிறப்பு கலால் வரி விதிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த குறைந்தபட்ச விலை மறுபடியும் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பை அறிந்த மதுபிரியர்கள், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…