நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது-கிரண்பேடி

Default Image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று  கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது .ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்துவைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்னை இல்லை.

3 ஆண்டுகளாக நீர்நிலைகளை பராமரிப்பதில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி வருகிறது .தமிழகத்தில் உள்ள எந்த அணையில் இருந்தும் புதுச்சேரிக்கு தண்ணீர் வருவதில்லை.தமிழர்களின் மனம் பாதிக்கும் வகையில் ட்வீட் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்