ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றும உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும், புதிய சட்டப்பேரவை கட்டடத்திற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில், சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் செப்டம்பர் மாதம் வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.330 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும், புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் குறித்த தேதி அதன்பின் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…