புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  கருத்துக்கு  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு…!

Default Image

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  கருத்துக்கு  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று  மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் கூறுகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது.அதேபோல் ஆளுநர் அலுவலகம் சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது.அதாவது 85 லட்சம் நிதி முறைகேடு என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
Image result for கிரண் பேடி நாராயணசாமி
இந்நிலையில்  அம்மாநில முதல்வர் நாராயணசாமி  கருத்துக்கு  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் செய்யப்படுவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்