புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் யார் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், நேரு உள்ளிட்டோர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சந்தித்து அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…