Categories: இந்தியா

வாக்குக்கு பணம்… நான் தேர்தலை புறக்கணிக்கிறேன்.. கொந்தளித்த அதிமுக வேட்பாளர்!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்படுவதாக புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தமிழ்வேந்தன் கூறியதாவது, நான் ஒரு இளைஞனாக வாக்குக்கு பணம் கொடுக்காமல் நேர்மையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறி தான் அதிமுக சார்பில் புதுச்சேரியில் தொகுதியில் களமிறங்கி உள்ளேன்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாஜகவை சேர்ந்த வேட்பாளர் நமச்சிவாயம் ஒரு வாக்குக்கு 500 ரூபாயும், அதேபோல் காங்கிரேஸை சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரான வைத்திலிங்கம் ஆகியோர் ஒரு வாக்குக்கு 200 ரூபாயும் கொடுத்துள்ளார்கள். வாக்குக்கு பணம் கொடுத்து மீண்டும் ஏழை மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த தேர்தலை மாற்றிவிட்டனர்.

இந்த தேர்தல் என்பது நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இது இளைஞர்களுக்கு, பெண்களுக்கும் மற்றும் அடுத்த தலைமுறைக்கும் நாம் வழிவிட வேண்டிய தேர்தல். ஆனால் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன், அவர்களின் ரத்தத்தை குடித்துதான் வாழ்வேன் என்று நினைத்தீங்க என்றால் நான் இந்த தேர்தலையே புறக்கணிக்கிறேன் என ஆவேசமாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் தேர்தல் நேர்மையாக நடைபெறாததால் இந்த தேர்தலையே புறக்கணிக்கின்றேன். இந்த தேர்தலை உடனடியாக தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். ஒட்டுக்கு பணம் கொடுப்பது தவறு, ஒரு இளைஞனாக நானும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அடுத்து வரும் தலைமுறைகள் எப்படி முன்னேறும். ஏழைகள் எப்படி முன்னேற முடியும், கல்விக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

எல்லாருமே மீண்டும் மீண்டும் வாக்குக்கு பணம் கொடுத்து தவறு செய்தால் இந்த நாடு, நமது மாநிலம் எப்படி முன்னேறும் என கொந்தளித்து பேசினார். மேலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை அவர்களை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். இது தொடர்பாக புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பேன் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

32 minutes ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

1 hour ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

2 hours ago

இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! என்ன காரணம்?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…

3 hours ago

GT4 ஐரோப்பிய கார் ரேஸில் மாஸ் காட்டிய அஜித் அணி! 2-வது இடத்தை பிடித்து சாதனை!

பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

3 hours ago

“என் போனை ஒட்டு கேக்குறாங்க” நயினார் மாதிரி தான் எனக்கும் – சீமான் ஆதங்கம்!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…

4 hours ago