புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டில் திடீர் உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், முறையாக நியமனம் செய்யப்படவில்லை எனக் கூறி அந்த 3 பேரையும் சபாநாயகர் வைத்திலிங்கம் எம்எல்ஏக்களாக ஏற்க மறுத்தார்.
புதுச்சேரியில் மத்திய அரசு பாஜகவைச் சார்ந்த 3 பேரை தானாகவே நியமன எம்எல்ஏக்களாக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமிநாராயணன் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்தது உச்சநீதி மன்றம் .அதில் புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…