பொதுத்துறை பொதுக் காப்பீட்டு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் இன்று நிறைவேற்றம்..!

Published by
Edison

பொதுத்துறை பொது காப்பீட்டு சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அமளிக்கிடையே,பொது காப்பீட்டு வர்த்தக திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். கடந்த முறை மத்திய பட்ஜெட்டில் நாட்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.அதன்படி, ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தை, தனியார் மயமாக்குவது தொடர்பான சட்ட திருத்த மசோதா, தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவர் கூறுகையில்:”2021-22 ஆம் ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்க நாங்கள் முன்மொழிகிறோம். இதற்கு சட்ட திருத்தங்கள் தேவைப்படும்”,என்று கூறினார்.

இதனால்,பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் அதிக தனியார் பங்களிப்பை வழங்குதல், காப்பீடு ஊடுருவல் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பாலிசிதாரர்களின் நலன்களை சிறப்பாகப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு பங்களித்தல், சட்டத்தின் சில விதிகளைத் திருத்துவது மசோதாவில் அவசியமாகிவிட்டது.

இந்நிலையில்,அரசுக்குச் சொந்தமான காப்பீட்டாளர்களில்,அரசு தனது பங்குகளைப் பெற அனுமதிக்கும் வகையில் பொதுக் காப்பீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இன்று நிறைவேற்றியது.

அதன்படி,பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயமாக்கல்) திருத்த மசோதா 2021,இந்திய சந்தைகளில் இருந்து தேவையான ஆதாரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் பொதுத்துறை பொது காப்பீட்டாளர்கள் புதுமையான தயாரிப்புகளை வடிவமைக்க முடியும்.

மேலும்,மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்தில் ஈக்விட்டி மூலதனத்தில் 51 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது என்ற தேவைகளை அகற்ற முற்படுகிறது.

இன்றுவரை,பொதுத் துறையில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இப்போது, இவற்றில் ஒன்று தனியார் மயமாக்கப்படும்,ஆனால்,மத்திய அரசு அதன் இன்னும் பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

24 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

37 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

1 hour ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

2 hours ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

2 hours ago