பஞ்சாபில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு..! ஏன் தெரியுமா..?

Default Image

பஞ்சாபில் மாவீரர் தினத்தையொட்டி நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு. 

சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் என அழைக்கப்படுகிறது.

பொதுவிடுமுறை 

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் சட்டப்பேரவையில் பேசிய போது சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி, மாவீரர் தினத்தையொட்டி பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும், பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலான் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பஞ்சம மக்களை கேட்டுக் கொண்டார். அதன்படி நாளை (மார்ச்-23)  பள்ளி கல்லூரிக ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்