கர்நாடகாவில் வருகின்ற ஜூலை 30,31 இல் துவங்கவுள்ள பொது நுழைவு தேர்வு!

Published by
Rebekal

கர்நாடக மாநிலத்தின் பொது நுழைவுத் தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாகவே எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்கும் பொழுதே பொது நுழைவுத் தேர்வையும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை முதல்வரும் உயர் கல்வி அமைச்சருமான டாக்டர் அஸ்வத் நாராயணன் அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தற்பொழுது வருகின்ற ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 497 மையங்களிலும் 120 இடங்களிலும் 1.95 லட்சம் மாணவர்கள் இந்த பொது நுழைவுத் தேர்வை எழுத உள்ளார்கள் என்று ஒரு அறிக்கையில் நாராயணன் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நான்கு நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறியுள்ள மாணவர்களுக்கும், தனி அறை கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கபடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அனைத்து சோதனைகள் உடன் கூடிய தேர்வு எழுதுவதால் மாணவர்கள் பீதி அடைய தேவையில்லை எனவும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுடன் கலந்துகொண்டு தேர்வுகளை நன்முறையில் எழுதி செல்லலாம் எனவும் டாக்டர் நாராயணன் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

13 minutes ago

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

41 minutes ago

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…

46 minutes ago

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…

1 hour ago

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

2 hours ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

2 hours ago