முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பொதுமக்கள் நாளை 11:00 முதல் 12:30 மணி வரை சிடிஎஸ் கராஜ் மார்க் இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம்.
நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, அதனை தொடர்ந்து, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ சிறப்பு விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் அனுப்பப்பட்டது.
இரவு 8 மணியளவில் டெல்லிக்கு 13 பேரின் உடல்களும் வரவுள்ளது. இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பொதுமக்கள் நாளை 11:00 முதல் 12:30 மணி வரை சிடிஎஸ் கராஜ் மார்க் இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம். இராணுவ வீரர்கள் 12:30-01:30 மணி நேரங்களுக்கு இடையில் மரியாதை செலுத்தலாம்.
அதன்பிறகு, டெல்லி கான்ட் பிரார் சதுக்கத்தில் இறுதிச் சடங்கிற்காக துப்பாக்கி வண்டியில் சடலம் எடுத்துச் செல்லப்படும் எனவும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காலமான பிரிக் எல்எஸ் லிடரின் இறுதிச் சடங்குகள் நாளை தில்லி கான்ட் மைதானத்தில் 09:15 மணி அளவில் நடைபெறும் என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…