டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது, அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என பாஜக எம்.பி அக்ஷய்வர் லால் கோண்ட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்தரபிரதேச மாநிலம் பரைச் தொகுதி பாஜக எம்பி அக்ஷய்வர் லால் கோண்ட் அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவது விவசாயிகள் அல்ல, அவர்கள் சீக்கியர்கள் மற்றும் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.
மேலும் இவர்கள் உண்மையான விவசாயிகளாக இருந்தால் நாட்டில் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை சந்தைக்கு வந்திருக்காது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இவர்கள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி போராட்டம் நடத்தக் கூடிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். மேலும் போராட்டம் நடத்தக் கூடிய பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் ஒரு கொள்ளைக்காரன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…