கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்.!

Siddaramaiah

டெல்லி ஜந்தர்மந்தரில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி. கே.சிவகுமார் உள்ளிட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் எம்பிக்கள் மத்திய அரசு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்திற்கு உரிய வரி பகிர்வு வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றனர். கர்நாடகவில் இருந்து ஜிஎஸ்டி வரி உரிய அளவில் கிடைக்கப்பெறவில்லை என்றும் 100 ரூபாய் அளித்தால் பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் கிடைக்கிறது. ஆனால்,உத்தரபிரதேசத்திற்கு 100 ரூபாய் அவர்கள் அளித்தால் அவர்களுக்கு 330 ரூபாயிலிருந்து 350 ரூபாய் கிடைக்கிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு கர்நாடகா ரூ.4.30 லட்சம் கோடிக்கு மேல் வரி செலுத்துகிறது. இந்நிலையில், பகிர்வு பணத்தை மத்திய அரசு திரும்ப தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இன்று கர்நாடகா மாநிலம் முதலமைச்சர் போராடியது போல நாளை கேரளா அரசு இதே டெல்லி சந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை அறிவித்துள்ளது.

புதிய தேர்தல் ஆணையரை தேர்வு… பிரதமர் தலைமையில் கூட்டம்…!

இதனிடையே, கர்நாடக மாநில அரசு போராட்டம் நடத்தும் நிலையில், மத்திய அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கிரிராஜ் சிங், கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொய்யர்களின் அரசு என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்