Categories: இந்தியா

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம்..! பெண் விவசாயியை அறைந்த போலீஸ்..! வைரலாகும் வீடியோ..

Published by
செந்தில்குமார்

பஞ்சாபில் நடந்த போராட்டத்தின் போது பெண் விவசாயியை போலீஸ் அதிகாரி அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து கத்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலை சுமார் ரூ.39,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. இந்த நெடுஞ்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் விவாசாயிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த போராட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களை பறிக்க அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயியை பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் அறைந்துள்ளார். இதன்பின், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளார். தற்பொழுது, போலீஸ் அதிகாரி பெண் விவசாயியை அறைந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) உருவாக்கப்பட்டு வரும் இந்த விரைவுச் சாலை, டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் பயண நேரத்தை நான்கரை மணி நேரமாகவும், தேசிய தலைநகர் மற்றும் கத்ராவிற்கும் இடையிலான பயண நேரம் ஆறரை மணி நேரமாகவும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

13 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

14 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago