நாகாலாந்தில் பதற்றம் நீடிப்பதால், மோன் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அமோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படையினர் தவறுதலாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான நிலையில், முகாமை சுற்றி நாகாலாந்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், மோன் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…