நாகாலாந்தில் நீடிக்கும் பதற்றம் – இணைய சேவை முடக்கம்..!

Default Image

நாகாலாந்தில் பதற்றம்  நீடிப்பதால், மோன்  மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

நாகாலாந்தின் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அமோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படையினர் தவறுதலாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான நிலையில், முகாமை சுற்றி நாகாலாந்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் பதற்றம்  நீடிப்பதால், மோன்  மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்