கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காலமாக இந்த வருடம் முழுவதுமே உலகம் எங்குமுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. தற்பொழுது தான் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசாங்கமும் மக்களின் நிலை கருதி பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடவும் கட்டுப்பாட்டுடன் அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ள நிலையில், பல மாநிலங்களிலும் ஓரளவு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுடன், சில விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்னாடக மாநிலத்தில் இந்த வருடத்திற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரங்களில் கிளப்புகள், கோவில்களில் அதிகப்படியான மக்கள் சேருவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதாலும், இதனால் கொரோனா வைரஸ் தீவிரமடையலாம் என்பதாலும் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதியிலிருந்து ஜனவரி 2 ஆம் தேதி வரை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…